மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் HRA மற்றும் DA 3% உயர்வு – முக்கிய விவரங்கள்!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர்.
வீட்டு வாடகை படி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போது 31% ஆக உள்ளது. ஆனால் 2022 ஜனவரி 1க்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை நடந்து வரும் நிலையில் விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீண்டும் 3% அதிகரிக்கப்பட்டு மொத DA 34% ஆக வாய்ப்புள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு அரங்கம், புதிய சிப்காட் தொழிற்பூங்கா – மாமதுரையாகும் ‘மதுரை’ நகரம்! முதல்வர் உரை!
பல மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள காரணத்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்ட பிறகு ஊழியர்களின் வீட்டு வாடகை படியான HRA ஐ அதிகரிக்க உள்ளது. DA 25% ஐத் தாண்டும்போது மட்டுமே HRA அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டு, மத்திய அரசு ஜூலை 2021 இல் DA வை 28% ஆக அதிகரித்தது. HRA மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலை ஊழியர்களுக்கும் ஏற்றவாறு 27%, 18% மற்றும் 9% சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – போலீசார் அதிரடி! ரூ.21 லட்சம் அபராதம் வசூல்!
போக்குவரத்துத் துறையின் தகவலின் படி DA 50% ஐ தாண்டும் போது மட்டுமே HRA 30%, 20% மற்றும் 10% ஆக அதிகரிக்கும். மத்திய அரசு அதன் ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய பகுதியான குடியிருப்பு செலவுக்கான வீட்டு வாடகை படியை அவர்கள் குடியிருக்கும் நகரத்திற்கு ஏற்றவாறு வழங்குகிறது. வாடகை வீட்டில் இருக்கும் ஊழியர்கள் இந்த சலுகையை பெற விண்ணப்பிக்கலாம். சொந்தமாக வீடு வைத்திருக்கும் நபர்கள் பிரிவு 80ஜிஜியின் கீழ் வரி விலக்குகளை பெற முடியும். மீண்டும் ஒரு முறை HRA அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் ஊழியர்கள் இதன் மூலம் அதிக அளவில் பயனடைவார்கள்.