ஜல்லிக்கட்டு அரங்கம், புதிய சிப்காட் தொழிற்பூங்கா – மாமதுரையாகும் ‘மதுரை’ நகரம்! முதல்வர் உரை!
தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மதுரையில் ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வரின் திட்டப்பணிகள்:
தமிழகத்தில் கடந்த 20221ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு தொடர்ந்து பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது அனைத்து துறை அமைச்சர்களும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது மதுரையில் ரூ.219 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இவர் திமுக அரசு செயல்டுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – போலீசார் அதிரடி! ரூ.21 லட்சம் அபராதம் வசூல்!
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மதுரையில் ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைய உள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மதுரையில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மத்திய சிறைச்சாலை புதிய இடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Post Office வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடைபெறும் 2 ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெறும். மதுரை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்து உள்ளார்.