தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – போலீசார் அதிரடி! ரூ.21 லட்சம் அபராதம் வசூல்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம் வசூல்:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று சுமார் இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் வீரியம் குறையாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து கொரோனா தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா? பீட்டர்சன் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!
அதன்படி தினசரி நாட்களில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கை முழுமையாகவும், முறையாகவும் பின்பற்றும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – மாணவர் சேர்க்கை உயர்வு!
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் கொரோனா வீதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு உத்தரவை மீறி ஞாயிற்றுக் கிழமைகளில் கடையை திறந்த கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அந்த வகையில் ஜன.6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.21 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.