கொரோனா காரணமாக ரூ.79.47 கோடி வேளாண் கடன் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேளாண் கடன்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் இல்லாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநில அரசுகளும் சில நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
இந்த வரிசையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய கர்நாடகா கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அமைச்சர் சோமசேகர் கூறுகையில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பணிக்கு சென்று சம்பாரித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பலியான காரணத்தால் ஒட்டு மொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கர்நாடகா அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க உள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் 10,187 கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் 2020 – 21 ஆம் நிதியாண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். எனவே அவர்கள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.