தமிழகத்தில் யானைகள் முகாம்களில் பணிபுரிபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த நிலையில், இந்த யானையை பராமரிப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும் யானைகள் பராமரிப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
யானைகள் முகாம்கள்
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகத்தில் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான திரு. பொம்மன், திருமதி பெல்லி தம்பதியர்கள் முதல்வரை சந்தித்தனர். இவர்களை தமிழக முதல்வர் பாராட்டி, பொன்னாடை அணிவித்து இருவருக்கும் தலா ரூ.1 ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது, முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்களுக்கும் தலா ரூ.1 இலட்சம் வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பணியாளர்கள் தங்குவதற்கு உகந்த வீடுகள் கட்டுவதற்காக அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.9.10 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – காரணம் இதுவா? வெளியான அப்டேட்!
இதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கவும் மற்றும் புதிய யானைகள் முகாம் கட்டுவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமில், அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.