அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – காரணம் இதுவா? வெளியான அப்டேட்!
இந்தியாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பல கோரிக்கைகளை ஆளுங்கட்சி வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு அதனை நிராகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை 18 எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பின் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்வதால் நாடாளுமன்றத்துக்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நாடாளுமன்றத்தின் வெளியில் உள்ள சாலையில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.