தமிழகத்தில் 1 – 9 ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு – ஏப். 17 முதல் துவக்கம்? கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல்கள் அதிக அளவு பரவி வரும் நிலையில் 9 -ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆண்டுத்தேர்வு:
தமிழகத்தில் இன்புளுயன்சா வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சலால் தற்போது உயிரிழப்பும் ஏற்படுவதாக தகவல்கள் வந்துள்ளதையடுத்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு விரைந்து ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஏப். 06ம் தேதி 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
இந்தியாவில் பரவும் H3N2 வைரஸ் – அதிகரிக்கும் உயிரிழப்பு.. பதற்றத்தில் மக்கள்!
இந்த நிலையில் 1 – 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதி ஆண்டுத்தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏப். 24ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப். 17ம் தேதி முதலே துவங்கும் என்று தகவல்கள் வந்துள்ளது.