Amazon: 3000 செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்த திட்டம் – 2024ம் ஆண்டில் முதல் செயற்கைக்கோள்!
Amazon நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் புவி சுற்றுப்பாதையில் 3000 செயற்கைக்கோள்களை ஏவ இருப்பதாக திட்டமிட்டுள்ளது. இதில் முதல் செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் இயக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள்
Amazon நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் புவியின் சுற்றுப்பாதையில் சுமார் 3,000 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, Elon Musk’s SpaceX நிறுவனத்துடன் இணைந்து செயற்கைக்கோள்களை தயாரிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் வருகிற 2024ம் ஆண்டின் முதற்பகுதியில், தனது முதலாவது செயற்கைக்கோளை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் Kuiper networkல் $10 பில்லியன் (சுமார் ரூ. 82,400 கோடி) செலவில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் 3 விதமான மொபைல் ஆன்டெனாக்கள் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக 19 x 30 அங்குல அளவு கொண்ட மொபைல் ஆண்டெனா ஒன்று வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக வினாடிக்கு 1 ஜிகாபைட் வரையிலான இணைய வேகம் வரை கிடைக்கும் என்றும் இது 7 அங்குல அகலம் மற்றும் ஒரு பவுண்டு எடை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.