தெற்கு ரயில்வே துறையில் ரூ.29,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு தெற்கு ரயில்வே துறை (RRCSR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sports Quota பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு தெற்கு ரயில்வே துறையில் (RRCSR) விளையாட்டு பிரிவுக்கு என 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Volleyball விளையாட்டில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.மேற்கண்ட பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், உடல் ஊனமுற்றவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போன்றவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.