அர்ஜுன், ரோஜா குழந்தையை பார்க்கா விட்டால் பாட்டி உயிருக்கு ஆபத்து – அர்ஜுனின் கலாட்டா நாடகம்!

0
அர்ஜுன், ரோஜா குழந்தையை பார்க்கா விட்டால் பாட்டி உயிருக்கு ஆபத்து - அர்ஜுனின் கலாட்டா நாடகம்!
அர்ஜுன், ரோஜா குழந்தையை பார்க்கா விட்டால் பாட்டி உயிருக்கு ஆபத்து - அர்ஜுனின் கலாட்டா நாடகம்!
அர்ஜுன், ரோஜா குழந்தையை பார்க்கா விட்டால் பாட்டி உயிருக்கு ஆபத்து – அர்ஜுனின் கலாட்டா நாடகம்!

சன் டிவியில் ரோஜா தொடருக்கு பட்டி, தொட்டி எங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் கதையின் கதையின் திருப்பங்கள் தான். அப்படி தற்போது நடக்கும் திருப்பங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

அர்ஜுனின் நாடகம்:

சின்னத்திரை சீரியல்கள் போட்டியில் முக்கியமாக சன்டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் முன்னணியில் இருந்து வருகிறது. அதில், சன் டிவியில் ரோஜா தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதுமே நம்பர் 1 ரகம் தான். அந்த தொடரில் தங்கள் குடும்பத்து பெண்னான ரோஜாவை யாரென்று தெரியாமல் பல தொல்லைகள் கொடுத்து வரும் பாட்டியும், பேத்தியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ஏராளம். அதையெல்லாம் ரோஜா சமாளித்து தன்னை அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நிரூபித்துக் கொண்டுள்ளார். தற்போது அர்ஜுன் மற்றும் ரோஜாவிற்கு திருமணம் முடிந்து பல நாட்கள் ஆகியுள்ளது.

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலுக்கு குவியும் எதிர்ப்பு – ப்ரோமோவை பார்த்து கொந்தளிப்பு!

இவர்களுக்கு முதலிரவிற்கு நல்ல நாள் பார்ப்பது குறித்து செண்பகம் ஏற்பாடு செய்கிறார். ஆனால் அனு அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இதனால் அர்ஜுன் அனைவரையும் ஏமாற்றும் விதமாக தனது நண்பரை போலி ஜோசியராக அழைத்து வருகிறார். அவர் பாட்டியின் உயிருக்கு ஆபத்து என்று கூறுகிறார். உடனே ரோஜா என்ன செய்யணும், பாட்டிக்காக நான் உயிரை கூட கொடுப்பேன் என்று சொல்ல, அனு என் உயிரை தான் கொடுப்பேன் என்று போட்டி வருகிறது. ஆனால் ஜோசியர் ஒரு பரிகாரத்தை கூறுகிறார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு பின் நயன்தாராவின் ‘மாஸ்டர்’ பிளான் – ரசிகர்கள் உற்சாகம்!

அதன்படி, இன்னும் 10 மாதத்திற்குள் பாட்டி அவரது கொள்ளு பேர குழந்தையை பார்க்க வேண்டும், அப்படி செய்தால் அவரது உயிரை காப்பாற்றலாம் என்று கூறுகிறார். அதனால் உடனடியாக அர்ஜுன் – ரோஜாவுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லுகிறார். ஆனால் அனு அதெல்லாம் வேணாம், எனக்கும், அஸ்வினுக்கு கல்யாணம் செய்து வைங்க, நான் குழந்தை பெற்று தருகிறேன் என்று கூறுகிறார். பாட்டியும், இதற்கு ஒத்துக் கொள்கிறார். இதனால் அவரை தனியாக அழைத்து வந்து அனு இப்போல்லாம் நீங்க ரோஜாக்கு தான் சாதகமா பேசுறீங்க என்று குறை கூறுகிறார். ஜோசியர் சொன்ன படி என் உயிர் தான முக்கியம். நான் நல்லா இருந்தால் தானே உன்ன பாத்துக்க முடியும் என்று பாட்டியும் சமாதானம் செய்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!