சென்னையில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.27ம் தேதி) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரத் துறையின் கீழ் உள்ள மின்நிலையங்களில் மாதந்தோறும் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக பழுதான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அவ்வாறு மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்து குறிப்பிட்ட மின்வாரிய பொறியாளரால் செய்தித்தாள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்படும். அந்த வகையில் சென்னையில் தாம்பரம் பகுதிகளில் நாளை நவ.27ம் தேதி மின்பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Office சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.16.2 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம்! முழு விபரம் இதோ!
அதன்படி தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் துணைமின் நிலையத்தின் கீழ் பயன்பெறும் ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பிய கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தணி நகர், பல்லவா பூங்கா, பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் சாலை, அழக்கப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.