விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு பின் நயன்தாராவின் ‘மாஸ்டர்’ பிளான் – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பட்டத்துடன் மக்களிடம் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா:
வெள்ளித்திரையில் விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பல ஆண்டுகளாக தன்னுடைய மார்க்கெட் குறையாமல் இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழில் ஐயா படத்தில் சிறிய பெண்ணாக அறிமுகமானார். அதன் பின் அவருக்கு ரஜினியின் சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து பல வெற்றி படங்களை அவர் கொடுத்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்.
தனது காதலரை அறிமுகம் செய்து வைத்த ‘ரோஜா’ சீரியல் ப்ரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது நாயகியை மையமாக கொண்ட கதைகளில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான “அண்ணாத்த” படத்தில் அவருக்கு மிகவும் ஸ்ட்ராங் கதாபாத்திரம் இருந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். அவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் மணவாழ்க்கையில் இணைய இருக்கின்றனர்.
அதன் பின் நடிப்பதில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நயன்தாரா எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார். தற்போது அதை விட சிறந்த வீடு ஒன்றினை தேடுவதாக தகவல் வெளியானது. அதை அடுத்து அவர் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட்டை புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு வீடுகளும் நான்கு பெட்ரூம் கொண்டது.
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணத்திற்கு பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இந்த புது வீட்டில் தான் வாழ இருக்கின்றனர். தற்போது அந்த வீட்டின் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. நயன்தாரா திருமணம் முடிந்த பின் வீடு தயாராகி விடும். அதன் பின் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் இருக்கும் போயஸ் கார்டனில் நயன்தாராவின் வீடும் இருக்கும். இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் சந்தோஷத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.