தனது காதலரை அறிமுகம் செய்து வைத்த ‘ரோஜா’ சீரியல் ப்ரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக செல்லும் ரோஜா சீரியல் நாயகி ப்ரியங்கா நல்காரி அவர்கள் மக்கள் மனதில் ரோஜாவாகவே இருந்து வருகிறார். தற்போது அவர் தனது காதலரை மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறி சமூக வலைதளத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
ரோஜா சீரியல் நாயகி:
சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை விட மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ளனர். இதற்கு இவர்கள் வெள்ளித்திரை நடிகர்களை போல் அல்லாமல் ரசிகர்களை தினமும் வீட்டில் சந்திக்கும் டிவி தான் முக்கிய காரணம். மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் நடிகர்களும் வளர்ந்து வருவார்கள். அவர்களுக்கான வாய்ப்புகளும் அதிக அளவில் இருக்கும்.
இதேபோல், தற்போது சன் டிவியின் நம்பர் 1 சீரியலாக உள்ள ரோஜா சீரியலும் அதனை நட்சத்திரங்களும் மிகவும் அறியப்படும் வகையில் உள்ளனர். சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை முன்னணிக்கு கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருப்பது ரோஜா சீரியல் தான். இந்த தொடரில் ரோஜாவாக கதையின் நாயகியாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த ப்ரியங்கா நல்காரி நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் சீரியல்கள் நடித்துள்ளார். ஆனால் ரோஜா கதாப்பாத்திரம் தான் அதிக ரசிகர்களை பெற்றுத்தந்துள்ளது.
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் ஒரு தான் ஒருவரை பிடித்தபடி உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இவர் தான் தனது காதலர் என்று கூறியிருந்தார். இதனால் இந்த இன்ஸ்டா பதிவு மிகவும் வைரலாக மாறியது. அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டார். அதில் ரோஜா சீரியல் வில்லி அனுவாக நடிக்கும் அக்ஷ்யா தான் அந்த நபர் என்பது தெரிந்துள்ளது. அந்த புகைப்படத்தில் நெருங்கிய நண்பர்கள் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அதன் பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.