அஜித்தின் கதாநாயகி முதல் ‘ரோஜா’ சீரியல் மாமியார் வரை – நடிகை காயத்ரியின் திரைப்பயணம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவுக்கு மாமியாராக நடித்து வரும் நடிகை காயத்ரியின் வெள்ளித்திரை பயணம் முதல் சின்னத்திரை சீரியல் வரை கடந்து வந்த பாதை குறித்த சில விவரங்களை இப்பதிவில் காணலாம்.
நடிகை காயத்ரி
இப்போதெல்லாம் மொபைல் போன், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் என பல பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. ஆனால் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வரை மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது இந்த சீரியல்கள் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு நாளும் காலை துவங்கி இரவு உறங்க செல்லும் வரை டிவி சேனல்களில் இந்த சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. அதனால் சீரியல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் மக்களின் மனம் கவர்ந்த பல சீரியல்கள் இன்றளவும் பல்வேறு தரப்பினரிடையே பேசப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல். இந்த சீரியல் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் நடிகை காயத்ரி. இவர் ஒரு சினிமா நடிகை ஆவார். வெள்ளித்திரை மூலம் ஆரம்பித்த நடிகை காயத்ரியின் சினிமா பயணம் இப்போது சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் மூலம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
நடிகை காயத்ரி தனது அண்ணனின் சிபாரிசுவின் பேரில் ‘பாசமலர்கள்’ என்ற திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த பாசமலர்கள் திரைப்படத்தில் அஜித், அரவிந்த்சாமி, ரேவதி, ரகுவரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் நடிப்பில் உருவான ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காயத்ரி.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
அதற்கு பின்பு எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வராததால் ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் நாயகியாக மாறினார். இதை தொடர்ந்து சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காயத்ரி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‘ரோஜா’ சீரியலில் மாமியாராக மறுபிரவேசம் செய்திருக்கிறார். அந்த வகையில் இப்போது பல மருமகள்களின் கனவு மாமியாராக நடிகை காயத்ரி இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.