தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் – ரூ.47.16 கோடி ரூபாய் விடுவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஊதிய நிதி ரூ.47.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
நிலுவை ஊதியம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த வருடம் முதல் அளிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. சம்பளம் வழங்காமல் இருந்ததால் தீபாவளி கொண்டாட முடியாமல், தொழிலாளர்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர்.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத் தேர்வுக்கான நடைமுறைகள் வெளியீடு!
இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்த போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு 60 முதல் 80 நாட்கள் வரையிலான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. பண்டிகைக்கு முன்பு சம்பள நிலுவையை விடுவிக்க கோரி அம்மாவட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து விரைவாக சம்பள நிலுவையை வழங்க ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – SBI வங்கி வழங்கும் சூப்பர் வசதி!
இந்த உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தொகை வழங்குவதற்காக ரூ.47.16 கோடி நிதி விடுவிக்கப்பட்டு நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.