செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளிலுள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது பெரும்பாலானோர் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் இந்த திட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்தியாவில் தற்போது அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பெண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் வங்கிகளிலும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் சேமிப்பதன் மூலமாக குறைந்த காலத்தில் அதிகமான அளவு லாபத்தை பெற முடியும் என்பதால் இதில் பெரும்பாலானோர் கணக்கை தொடங்கி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இதில் கிடைக்கும் சேமிப்பு தொகையின் மூலமாக பெண் குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை பயமின்றி எதிர்கொள்ள முடியும். அத்துடன் மற்ற திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிகளவு வட்டி கிடைக்கிறது. இதனை தொடர்ந்து இதில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்க முடிகிறது. அத்துடன் ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வரை இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது.
இந்தியாவில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24!
அதனால் தற்போது பெரும்பாலான வங்கிகளில் FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிற 7.6 வட்டி விகிதம் 8% முதல் 8.10% ஆக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், என்எஸ்சி உள்ளிட்ட திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.