இந்தியாவில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24!

0
இந்தியாவில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் - விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24!
இந்தியாவில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் - விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24!
இந்தியாவில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 24!

தங்க நகை முதலீடுகளை விட தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகிறார்கள். மேலும் மத்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பத்திரம் விற்பனை:

இந்தியாவில், தங்கத்துக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. அதனால் நடுத்தர குடும்பங்கள் தொடங்கி, பெரிய பணக்காரர்கள் வரை அனைவரும் தங்கம் வாங்குவதை முக்கியமான முதலீடாக கருதப்படுகிறது. ஆபரணமாக மட்டுமின்றி தங்கத்தை முதலீடாக வாங்குபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் நேரடியாகத் தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற பல்வேறு செலவினங்கள் உள்ளன. இதனால் நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தங்கப் பத்திரங்களின் முதல் தொகுப்பு விற்பனை நேற்று (ஜூன் 20) முதல் தொடங்கியது. ஜூன் 24ஆம் தேதி வரை தங்கப் பத்திர விற்பனை நடைபெறும்.மேலும் ஜூன் 28ஆம் தேதி தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும். மேலும் தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். மேலும், தங்கப் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டித் தொகை கிடைக்கிறது. இந்த வட்டித் தொகைக்கு வருமான வரி கிடையாது.

1.தங்க பத்திரங்கள் தபால் நிலையங்கள், மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும் விற்பனை நடைபெறும்.

2.தங்க பத்திரம் வாங்குபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பான் கார்டு நகலை தர வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் கொடுத்து அனைத்து தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

3. மேலும் அன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

4. ஒரு நபர் குறைந்த பட்சம் ஒரு கிராமில் இருந்து 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்களாக வாங்க முடியும். தங்கம் விற்பனைக்கு ஆவணமாக பத்திரமாக வழங்கப்படும். இதை டீமேட் கணக்கிலும் வாங்கிக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!