வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அதிரடி!

0
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - ரிசர்வ் வங்கி அதிரடி!
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அதிரடி!

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது .இதனால் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு:

கடந்த ஆகஸ்ட் 3 தொடங்கிய ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம், மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பண வீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்து உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு நாட்டில் வட்டி வீதம் 5.15 சதவீதம் ஆக இருந்தது. தற்போது, 5.40 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணவீக்க வீகிதமும் 6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் பணவீக்கம் மெல்ல குறையும். அதேபோல் வங்கிகளில் கடன் வளர்ச்சி கடந்தாண்டில் 5.5 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – பட்டியலில் பெயர் இருக்கிறதா? முழு விவரங்கள்!

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்பட உள்ளது. ஏனெனில், ரெப்போ வட்டி உயர்வின் தாக்கம் மற்ற அனைத்து வங்கிக் கடன்கள் மீதும் இருக்கும். அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமை ஏற்படும். எனினும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணம் போட்டவர்களுக்கு சலுகை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முன்கூட்டியே செலுத்தினால், அதிகரித்த வட்டி விகிதச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும் கடனாளிகள் குறைந்த வட்டி விகிதத்தில் மறுநிதியளிப்பு செய்யலாம் அல்லது தற்போது உள்ள கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க, EMI களை அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!