PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – பட்டியலில் பெயர் இருக்கிறதா? முழு விவரங்கள்!
PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நிதியுதவியை பெறுவதற்கான பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் மூலமாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்கிற கணக்கில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதியுதவி ஏழை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 12 ஆவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதாவது, PM கிசான் திட்டத்தின் 12 ஆவது தவணைக்கான நிதியுதவி செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயமாக e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். மேலும், PM கிசானின் புதிய பட்டியலில் உங்களது பெயர் இருக்கின்றதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும், ஆன்லைன் மூலமாகவே PM கிசான் திட்டத்தின் பணம் வந்தடைந்துவிட்டதா என்பதையும், நிதியுதவிக்கான பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முதலில் PM Kisan திட்டத்தின் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ என்கிற பக்கத்திற்கு சென்று ஃபார்மர் கார்னர் என்கிற பகுதிக்குள் நுழையவும். பின்னர், பயனாளிகள் பட்டியல் என்பதை கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவில் உங்களுக்குரிய மாநிலத்தை தேர்வு செய்யவும். பின்பு, மாவட்டம், தொகுதி, கிராமத்தின் பெயர் என அனைத்தையும் தேர்வு செய்து Get Report என்பதை கிளிக் செய்துவிட்டால் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.