தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதியினை மின்வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
மின்சாரம் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. மின் தேவையானது தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கு வேண்டிய உபகரணங்கள், கணினி துறையின் வளர்ச்சி, விவசாயங்களுக்கான பம்பு செட்டுகள் பெருக்கத்தால் மின் தேவை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுதல், மின் கசிவுகள் ஏற்படுதல் , மின்கம்பங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின் இணைப்பு கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் தீ பிடித்தல் போன்ற பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்பட கூடும்.
TN Job “FB Group” Join Now
இந்த வகையில் மின்சாரம் மூலம் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்தவும் , மின்சார கம்பியில் எதென்னும் பழுதுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
தமிழகத்திற்கு கூடங்குளம் மின்சார தேவை? ஒன்றிய அரசுக்கு கடிதம்!
மேலும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளான புத்தூர், சீதபற்பநல்லூர், உகந்தன்பட்டி, சுப்ரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குலம், மாறாந்தை, கல்லத்திக்குளம், நாலாங்குறிச்சி, கீழ கரும்புளியூத்து ஆகிய பகுதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும். எனவே இந்த பகுதி மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.