இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அகற்றம்? ஒன்றிய அரசு அதிரடி!

0
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அகற்றம்? ஒன்றிய அரசு அதிரடி!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அகற்றம்? ஒன்றிய அரசு அதிரடி!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அகற்றம்? ஒன்றிய அரசு அதிரடி!

இந்தியாவில் சுங்க சாவடிகளுக்கு பதிலாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் நம்பர் பிளேட் மூலம் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இயங்கும் சுங்க சாவடிகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்க சாவடிகள்:

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைத்து அதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வாகனங்களுக்கு ஏற்றவாறு மாற்றப்படும். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை அதிகரித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுங்கச்சாவடிகளில் அமலில் உள்ள பாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதிதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பாஸ்டேக் வசூல் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது நாட்டில் 90% சுங்கச்சாவடிகளில் ஐந்து நுழைவாயில்களில் பாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் சுங்க சாவடிகளை அகற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அவ்வழியே செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன் பிறகு நம்பர் பிளேட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுங்க கட்டணம் செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி நிறுவனங்கள் வழங்கும் நம்பர் பிளேட்டை வாங்கி சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து வாகனங்களுக்கும் இதுபோன்ற நம்பர் பிளேட்களை தங்களது வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முடிவு செய்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!