தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆக. 25) விருதுநகரில் உள்ள எரிச்சநத்தத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை விருதுநகரில் உள்ள எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

24 விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதனால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி நாளை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார். அதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், அழகாபுரி, மேல கோட்டையூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், சுரைக்காய் பட்டி, நடையனேரி, கிருஷ்ண மநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, கொங்கன்குளம், சிலார்பட்டி, முருகனேரி, சவ்வாஸ்புரம், கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக. 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!