Jio நிறுவனத்தில் ரூ.100க்கு கீழ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!
ஜியோ நிறுவனம் தற்போது 100 ரூபாய்க்கு கீழ் இருந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் முன்பு இருந்த “Buy 1 Get 1” திட்டமும் நீக்கப்பட்டுள்ளது.
ஜியோ திட்டங்கள்
இந்தியாவில் கொரோனா பரவலின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களது கவனத்தை செலுத்தினர். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து ஜியோ நிறுவனம் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 100 ரூபாய்க்கு கீழ் 69 மற்றும் 39 ரூபாயில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதனால் பலரும் பயன் பெற்று வந்தனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது கூடுதலாக ஜியோ நிறுவனம் புதிதாக 4ஜி போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்குள் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் 100 ரூபாய்க்கு கீழ் உள்ள இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் சலுகைகளை தனது வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. புதிய போன் வெளியாக இருப்பதால் இந்த திட்டங்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களில், 69 ரூபாய் திட்டம் 0.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் மொத்தம் 100 எஸ்எம்எஸ் ஆகிய அம்சங்களை கொண்டு இருந்தது.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!
அதே போல 39 ரூபாய் திட்டம் 100MB தினசரி டேட்டா மற்றும் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பை வழங்கி வந்தது. இந்த இரு திட்டங்களும் 14 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களாக இருந்து வந்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பதிலாக வேறு ஏதேனும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இருந்தும், இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கப்பட்டு இருப்பதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.