BSNL நெட்ஒர்க் பயனர்கள் கவனத்திற்கு – சூப்பர் ரீசார்ஜ் ஆபர்கள் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
BSNL நிறுவனம் பயனாளர்களுக்கு பண்டிகையை முன்னிட்டு புதிதாக ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் பயனாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
BSNL ஆபர்:
அரசுக்கு சொந்தமான நெட்வொர்க் வழங்கும் நிறுவனம் தான் பிஎஸ்என்எல் ஆகும். அரசு சார்ந்த பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இன்டர்நெட் என்பது அனைத்து துறைகளிலும் இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அதனால் பல்வேறு அரசு துறைகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் தான் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இது மிகவும் பழமையான நெட்வொர்க் என்பதனாலும், அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதனாலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சிறப்பான ஆபர்களை அறிவிப்பது வழக்கம் தான். அதே போல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதிய ஆபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு 3 ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது. எனவே இந்த திட்டங்களில் நீங்கள் 1 மாதம் வரை கூடுதல் செல்லுபடியாகும் நன்மையைப் பெற முடியும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணி 37% நிறைவு!
இந்த திட்டங்களை நீங்கள் பெற்றிருந்தால் உங்களுக்கு கூடுதலாக 1 மாதத்திற்கு இலவச டேட்டா மற்றும் இலவச கால் வசதிகள் வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.247- லிருந்து தொடங்குகிறது. பிஎஸ்என்எல் – ன் இந்த ஆபர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் – ன் இந்த ஆபர் அக்டோபர் 7 முதல் நவம்பர் 6ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதனால் இந்த ஆபரை பெற நினைக்கும் பயனாளர்கள் உடனே அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த சிறப்பான ஆபர் ரூ.247, ரூ.398 மற்றும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கிறது. ரூ.247 மற்றும் ரூ.398 திட்டங்களில் 5 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1999 திட்டத்தில் 30 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.224 உயர்வு – இன்றைய நிலவரம்!
இந்த ரூ.247 திட்டத்தில் 50 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 100 மெசேஜ் போன்ற வசதி 5 நாட்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும். ரூ.398 அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 100 மெசேஜ் போன்ற வசதி 5 நாட்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும். ரூ.1999 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 100 மெசேஜ் போன்ற வசதி 30 நாட்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 395 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தினால் பயனாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நெட்வொர்க் கவரேஜ் சரி பண்ணுங்கப்பா. இன்கம்மிங் அவுட் கோயிங் ரெண்டும் இல்ல.
நெட்வொர்க்கை சரி பண்ணுங்க நெட்டு சும்மா சுத்திகிட்டே இருக்கு.