மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி! பீதியில் பொதுமக்கள்!
சீனாவில் மறுபடியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹாங்காய் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரைக்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருந்தும்கூட கொரோனா நாளுக்கு நாள் இரட்டிப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா நான்காம் அலை வேகமெடுத்து கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் கூட கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தபடியே தான் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனால் பொது மக்கள் அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பழையபடி சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதிலும் சீனாவில் உள்ள ஹாங்காய் நகரில் தான் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதி முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும், சீனாவில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், சுற்றுலாத்தலங்கள், வணிக வளாகங்கள் என அனைத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை சீனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காய் நகரை தொடர்ந்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால் இந்த பகுதிகளிலும் கூடிய விரைவில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளிலுமே கொரோனா வேகமெடுத்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலுமே கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.