அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மறுதேர்வு – புதிய தகவல்கள் வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் மறுதேர்வு நடந்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மறுதேர்வு:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து வகுப்புகள் மற்றும் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வை நடத்தியது. இதில் அதிக முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் தகவல்!!
சில பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் செலுத்திய செமஸ்டர் தேர்வுக்குரிய கட்டணத்தை பல்கலைகழகத்திடம் செலுத்தாமல் இருந்தது. இதனால் இணையவழி தேர்வு எழுதிய 4.25 லட்சம் மாணவர்களின் முடிவுகளை மட்டுமே வெளியானது. மற்ற கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதில் 2.3 லட்சம் மாணவர்களில் 1.1 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதிக முறைகேடுகள் நடைபெற்றதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மறுதேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த மறுதேர்வு குறித்து விளக்க இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களோடு அண்ணா பல்கலைக்கழகம் கூட்டம் நடத்தியது. இதில் வரும் ஜூன் மாதம் இணைய வழியில் மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 3, 5 மற்றும் 7-வது பருவ மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு நடைபெறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருக்கும் தேர்வு 3 மணிநேரம் நடைபெறும். என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Pass markevvalavu va irukkum I think 50/100
1st year ku re exam illiya