தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிவிப்பு:
வெப்பச்சலனம் காரணமாக,
20.05.2021: சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
21.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
22.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
23.05.2021, 24.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி) 10, திருச்சிராப்பள்ளி டவுன் 7, வீரகனூர் (சேலம்), க்ளென்மோர்கண் (நீலகிரி), திருப்பத்தூர் (சிவகங்கை), குழித்துறை (கன்னியாகுமரி), பெரம்பலூர், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, நத்தம் (திண்டுக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 4, மெளலத்தூர் (வேலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 3, டேனிஷ்பேட்டை (சேலம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), புளிப்பாட்டி (மதுரை) தலா 2, விராலிமலை (புதுக்கோட்டை), கூடலூர் (தேனி), எருமைப்பட்டி (நாமக்கல்), வலங்கைமான் (திருவாரூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
22.05.2021, 23.05.20212: தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மறுதேர்வு – புதிய தகவல்கள் வெளியீடு!
தென்மேற்கு பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 22.05.2021 அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.