இந்தியாவில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் தகவல்!!
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படும் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
மூன்றாவது அலை:
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிக அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வல்லுநர்கள் குழு கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் – சுகாதாரத்துறை விளக்கம்!!
மத்திய அரசு கொரோனா குறித்த ஆய்வுகளுக்காக 3 ஆராய்ச்சியாளர் குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுவானது சூத்ரா என்ற முறையில் கொரோனா பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மணிந்த அகர்வால் அவர்கள் கொரோனா குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் மே மாத இறுதியில் கொரோனா பாதிப்புகள் பாதியாக குறையும். ஜூன் மாத இறுதியில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும்.
TN Job “FB Group” Join Now
மே மாத இறுதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிப்பு இன்னும் தீவிரமடைந்து பின்னர் குறையும் என்றும் கூறியுள்ளார். இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படும் என்றும் அப்போது அதிக அளவிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும், மேலும், கொரோனாவில் இருந்து முன்னரே மீண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கும், இதனால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.