தமிழகத்தில் 3000 பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 1200 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தினால் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் 149 அரசு கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 1200 பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சி, அந்த பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அது போக கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 60 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
ஆனால் புதிதாக கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் அதில் எந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. பல புதிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலைமை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட விலங்கியல், பாதுகாப்பியல் போன்ற பிரிவுகளில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே வரலாற்று பேராசிரியரை விலங்கியல் பாடத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணச்சுமை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் தகவல்!!
இது குறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் சங்க நிர்வாகி கூறுகையில், “அரசு கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த புதிய பேராசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை. அதனால் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளில் 3000 பேராசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் இந்த நியமனம் குறித்து விரைவில் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.