தமிழகத்தில் புதிதாக 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் – சுகாதாரத்துறை விளக்கம்!!
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த 9 பேருக்கு கருப்பு பூஞ்சை என்ற நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
கருப்பு பூஞ்சை:
நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் தீவிரமாக பரவி வருகிறது. இது ஒரு வைரஸ் கிருமியாகும். சீனாவிலிருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகமெங்கும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. இத்தொற்று உள்ளவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர். தகுந்த தடுப்பு மருந்துகளும் இல்லாதலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
தமிழகத்தில் தக்காளி உட்பட காய்கறிகள் விலை குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
இந்த வைரஸ் உருமாறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் இதன் வீரியம் அதிகம் இருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது முன்னெச்சரியாக அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கு பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றர். தற்போது தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த 9 பேரும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.