திடீரென மரணத்தை தழுவிய ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியாக பெருமூச்சு விட்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

0
திடீரென மரணத்தை தழுவிய ராமமூர்த்தி தாத்தா - நிம்மதியாக பெருமூச்சு விட்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
திடீரென மரணத்தை தழுவிய ராமமூர்த்தி தாத்தா - நிம்மதியாக பெருமூச்சு விட்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
திடீரென மரணத்தை தழுவிய ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியாக பெருமூச்சு விட்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராமமூர்த்தி தாத்தாவிற்கு மட்டும் தான் தெரியும். இந்நிலையில், திடீரென தாத்தா இறந்து விடுவது போன்றும், கோபி நிம்மதியாக பெருமூச்சு விடும் படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி எவ்வளவு தான் ஏமாற்றி கொண்டிருந்தாலும் கோபியை பாக்கியா முட்டாள் தனமாக நம்பி கொண்டிருக்கிறார். தன்னை ஏமாற்றி கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவும் பாக்கியாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். ஆனால், இது வரைக்கும் கோபியின் பெயரை ராதிகா கூறியதே இல்லை.

Exams Daily Mobile App Download

ராதிகாவும் பாக்கியாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் தன்னை பற்றிய உண்மைகள் இருவருக்கும் தெரிந்து நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என பயந்து எப்படியாவது இருவரையும் பிரித்தே தீர வேண்டும் என பிளான் போடுகிறார். ராதிகாவை கோபி காதலிப்பது மற்றும் பாக்கியாவை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ள போவது என அனைத்து விஷயமும் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். அனைத்து உண்மைகளையும் தெரிந்த பிறகு கோபியை கண்டிக்கிறார். அப்போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டியதால் பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து பார்த்து கோபியை அப்படியே விட்டு விடுகிறார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி தவறு செய்து கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும் என நினைத்து வீட்டில் பாக்கியாவும் கோபியும் இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ராதிகாவின் வீட்டிற்கு ராமமூர்த்தி தாத்தா செல்வதற்குள் ராதிகா வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார். எப்படியாவது ராதிகா வீட்டை கண்டுபிடித்து உண்மையை கூறியே தீரவேண்டும் என தாத்தா ராதிகாவின் வீட்டை தேடும் வேளையில் தாத்தா இறங்கியிருக்கிறார். இந்நிலையில், திடீரென ராமமூர்த்தி தாத்தா இறந்துவிடுவது போன்றும் இனிமேல் தன்னை மாட்டிவிட யாரும் இல்லை என கோபி நிம்மதியாக பெருமூச்சு விடும்படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!