தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

உதவித்தொகை:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் படித்து முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்று தலை தூக்கிய தன் காரணமாக இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் பொதுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர். இது தவிர மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது வேலை இல்லாமல் தவித்து வரும் பட்டதாரிகளுக்கு அந்தந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவித்தொகையாக அரசின் சார்பில் வழங்கி வருகின்றனர். மேலும் இந்த திட்டம் நமது நாடான இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் இந்த திட்டத்தில் சேருவதற்கான அறிவிப்பை அம்மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, படித்து முடித்த இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்றும், வயது தகுதியாக, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 45 வயது மற்றும் மற்றவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், மேலும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவருக்கு, 300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு, 750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரயில் முன்பதிவு ஆரம்பம்!

அதனை தொடர்ந்து, பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து விண்ணப்ப படிவம் பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி, அலுவலக வேலை நாளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அனைத்து அலுவலக வேலை நாளில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!