ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரயில் முன்பதிவு ஆரம்பம்!
இந்திய ரயில்வே பணியாளர் வாரியத்தால் நடத்தப்படும் NTPC தேர்வு வரும் மே 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இதற்கு உதவும் வகையில் ரயில்வே வாரியம் தேர்வுக்கென்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி தற்போது இந்த சிறப்பு ரயில்கள் குறித்த விரிவான தகவல்களை பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் ரயில்வே வாரியத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் NTPC மற்றும் குரூப் D தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக 24 ஆயிரத்து 649 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி முதல்நிலை கணினி வழித் தேர்வு கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
மேலும் முதல்நிலை கணினி வழித் தேர்வு முடிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதன்படி இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார்கள். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்வர்களுக்கு வேறு ஒரு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!
அதாவது நாமக்கல்லில் இருந்து சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்தேர்வினை எழுதுவதற்கு தேர்வர்களுக்கு உதவும் வகையில் வாரிய தேர்வுகளுக்கான சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்ய மே 10ம் தேதியும், கொச்சுவேலி – தாம்பரம், திருநெல்வேலி – மைசூரு சிறப்பு ரயில்களுக்கான பயண முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது.