தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 அன்று துவக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு துவங்கும் என அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ரம்ஜான் நோன்பு
இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜான் இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக இஸ்லாமியர்கள் சுமார் ஒரு மாத காலத்திற்கு நோன்பு இருப்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்த நோன்பு காலமானது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னமே துவங்கும்.
Follow our Instagram for more Latest Updates
மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச் 24) முதல் ஒரு மாத கால நோன்பு துவங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார். அதாவது, சவூதி அரேபியாவில் ரம்ஜான் நோன்பு துவங்கும் தினத்திற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 24 ஆம் தேதியன்று தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.