சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை – ஜி20 மாநாடு எதிரொலி!!
சென்னையில் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் பறக்க தடை
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 மாநாடு தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில், வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் வைத்து கருத்தரங்கு நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கிற்கு வரும் நபர்கள் கிண்டியில் உள்ள முக்கியமான ஹோட்டல்களில் தங்குகின்றனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 அன்று துவக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹோட்டல்கள் மற்றும் அதற்கான வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜி20 மாநாடு நடைபெறும் நாட்கள் உட்பட 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று மார்ச் 25 ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.