சென்னை மெட்ரோவில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Chief Vigilance Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Chief Vigilance Officer பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Group ‘A’ Service-ல் Senior Administrative Grade (SAG) அளவிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.