மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகள் பெருகி வருவதால் மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் முறையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகள் தற்போது 1000ஐ தாண்டியுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1140க்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
RRB NTPC Level 5 தேர்வு முடிவுகள் வெளியீடு – ஆவண சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு!!
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில் இன்று (மார்ச் 22) ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் முறையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.