விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – குற்றவாளியை தூக்கிய சந்தியா!
யார் பார்வதியை கடத்திருப்பார்கள் என சரியாக பிளான் போட்டு செல்வத்தை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கிறார். சந்தியாவின் தந்திர புத்தியை கண்டு போலீசார் அனைவரும் வியக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி சீசன் 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் பார்வதியை கடத்தியது யார் என்பதை சந்தியா கண்டுபிடிப்பாரா என சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது திருமணம் முடிந்ததுமே பார்வதியை மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டது. பார்வதியை கண்டுபிடிக்க தான் சந்தியா அலைந்து கொண்டிருக்கிறார். போலீசார் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக கடையில் புதிதாக யாரும் வேலைக்கு சேர்ந்துள்ளார்களா என செல்வத்திடம் போலீசார் கேட்கின்றனர். உடனே செல்வம் யாரும் சேரவில்லை என கூற அங்கு வந்த சந்தியா இவன் வேலைக்கு சேர்ந்தே 4 மாதங்கள் தான் ஆகிறது என சொல்கிறார்.
பாரதிக்கு தெரியாமல் DNA டெஸ்ட் எடுத்த கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
பின்பு, போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றனர். உண்மை தெரிந்து மாட்டிவிடுவோமோ என பயந்து செல்வம் எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கிறது என சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும், சந்தியா விடாமல் நான் கடையை பார்த்து கொள்கிறேன். நீ சென்றுவிட்டு வா என கூறுகிறார். மாட்டிகொள்வோமோ என்கிற பயத்திலேயே செல்வம் காவல் நிலையத்திற்கு செல்கிறார். போலீசார் அனைவரையும் விசாரித்து கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் சந்தியா அங்கு வந்து பார்வதி கிடைத்துவிட்டாள். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறாள். உடனடியாக அங்கு செல்லலாம் என சந்தியா போலீசாரை அழைத்து செல்கிறார்.
Exams Daily Mobile App Download
பார்வதி மட்டும் கண் முழித்துவிட்டால் அனைத்து உண்மையும் வெளிவந்துவிடும். அதற்குள் பார்வதியை கொலை செய்துவிடலாம் என நினைத்து பார்வதியை பார்க்க செல்வம் மருத்துவமனைக்கு செல்கிறார். டாக்டர் போல வேடமணிந்து வந்து குளுக்கோஸ் பாட்டிலில் விஷத்தை கலக்க முயற்சிக்கிறார். உடனடியாக சந்தியா அங்கு வந்து செல்வத்தை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.