பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – குடும்பத்துடன் கலந்து கொள்ளும் பாக்கியா!

0
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – குடும்பத்துடன் கலந்து கொள்ளும் பாக்கியா!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – குடும்பத்துடன் கலந்து கொள்ளும் பாக்கியா!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – குடும்பத்துடன் கலந்து கொள்ளும் பாக்கியா!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

ராதிகா, கோபியின் திருமண வைபோகம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவின் கணவரான கோபிக்கு, கடந்த பல காலமாகவே ராதிகா மீது காதல் தோன்றியுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிகளிலும் கோபி ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் ராதிகா மற்றும் பாக்கியா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். ஆனால், பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கோ, ராதிகாவை திருமணம் செய்ய போவது தனது கணவர் கோபி தான் என்பது பாக்கியாவுக்கோ தெரியாது.

கைது செய்யப்படும் பாக்கியா, காப்பாற்றுவாரா எழில்? “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!

கோபியின் தந்தைக்கும், மகன் எழிலுக்கும் கோபி ஒரு பெண்ணுடன் பழகி வருவது தெரியும். கோபியின் அப்பாவிற்கு கோபி ராதிகாவுடன் தான் பழகுகிறார், அவர் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதும் தெரியும், இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ராதிகாவின் மகளான மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் இல்லம் ஒன்றில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உணவு தயார் செய்து வழங்கும் பொறுப்பை, பாக்கியாவிடம் ஒப்படைத்திருந்தார் ராதிகா. இதனிடையே, கோபியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பதால், பாக்யாவும் அங்கு வரவிருப்பதை அறிந்த அவர், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பாக்கியவிடம் கூறிவிடுகிறார்.

இதன் காரணமாக குழந்தைகள் இல்லத்துக்கு பாக்கியாவும் வராமல் போகவே, தப்பித்துக் கொண்டார் கோபி. காரில் இருவரும் சென்று கொண்டிருக்க, மகளை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு போகலாம் என ராதிகா கூறுகிறார். தியேட்டர், ரெஸ்டாரண்ட், மால் என கோபி சொல்ல, அனைத்தையும் மறுக்கிறார் ராதிகா. பாக்கியா டீச்சர் வீட்டுக்கு என ராதிகா மறுகணம் சொன்னதும், சட்டென ஷாக் மோடில் காரை பிரேக் அடித்து நடுரோட்டில் நிறுத்துகிறார் கோபி. இந்த நிலையில் கோபி பாக்கியவிடம் மாட்டி கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெறுவதாகவும், இந்த திருமணத்தில் பாக்கியாவும், அவரது குடும்பத்தினரும் கலந்துகொள்வதாக காட்டப்பட்டு உள்ளது. எனவே மணக்கோலத்தில் கோபியின் நிலையைப் பார்த்ததும் பாக்கியாவும், அவரது குடும்பமும் என்ன செய்வார் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!