கைது செய்யப்படும் பாக்கியா, காப்பாற்றுவாரா எழில்? “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா சமைத்த உணவை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதால் போலீசார் பாக்கியாவை கைது செய்து இருக்கின்றனர். அம்மாவை கைது செய்ததை நினைத்து எழில் வருத்தப்பட்டு ஆழ அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. ராதிகா பாக்கியாவிடம் உணவு ஆர்டர் செய்து அநாதை ஆசிரமத்திற்கு கொடுக்கின்றனர். அப்போது அந்த உணவை சாப்பிட குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது. மருத்துவமனையில் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் போலீசாரிடம் புகார் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ராதிகா கோபியிடம் விசாரணை நடத்த பாக்கியாவிடம் வாங்கியதாக சொல்கின்றனர்.
அதனால் பாக்கியாவை போலீசார் கைது செய்கின்றனர். நான் சரியாக தான் சமைத்தேன் என பாக்கியா சொல்ல ஆனாலும் அவரை யாரும் நம்பவில்லை. இந்த விஷயத்தில் எப்படி உண்மையை நிரூபிப்பது என தெரியாமல் வீட்டில் அனைவரும் திணறி வருகின்றனர். வீட்டிற்கே வந்து பாக்கியாவை கைது செய்வதை பார்த்து அனைவரும் அழுகின்றனர். அப்போது எழில் வர நடந்ததை சொல்கிறார். அந்த நேரம் பாக்கியாவை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் எழில் இருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷன் சென்று பேச அங்கே போலீசார் பாக்கியா மீது தான் முழு குற்றமும் இருப்பதாக சொல்லி எழிலை அனுப்பிவிடுகின்றனர். எழில் இந்த முறையும் பாக்கியாவை காப்பாற்றுவாரா பாக்கியா மீது தவறு இல்லை என்பது எப்போது தெரியவரும் என பல கேள்விகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. கோபி தான் இதெற்கெல்லாம் காரணமாக இருப்பாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. அடுத்து வர போகும் எபிசோடுகளில் கோபி மாட்டிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது.