திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு, ஆகஸ்ட் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆகஸ்ட் 10 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் தினசரி லட்சக்கணக்கில் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் தொற்று எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக குறைந்து உள்ளது. இருப்பினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. எனவே அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
ஆகஸ்ட் 5 முதல் தமிழகம் வர RT-PCR பரிசோதனை கட்டாயம் – அமைச்சர் உத்தரவு!
இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு ஆகஸ்ட் மாத ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 2) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி – ஆகஸ்ட் 9ம் தேதி நேர்காணல்!
அதுமட்டுமின்றி மாநில அரசின் உத்தரவில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் உயர், மேல்நிலை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் அனைத்து வகுப்புகளையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.