ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – கடைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதி!!
பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும், கடைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
பஞ்சாப் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 1,593 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 5,79,560 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 65 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,076 ஆக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் தொற்று விகிதம் 2.54% ஆக குறைந்துள்ளது. இதுவரை 5,42,324 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் கட்டாய வசூல் – அரசு எச்சரிக்கை!!
தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக அங்கு ஜூன் 10ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறைந்தவடைய தொடங்கிய நிலையிலும், ஜூன் 15 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் பணிக்கு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவும், மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான ஊரடங்கு உத்தரவும் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.