பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் வெளியீடு – TRB குற்றவியல் நடவடிக்கை!
தமிழகத்தில் TRB தேர்வு வாரியத்தால் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் வெளியிடபட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்கை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு கடந்த சில தினங்களாக ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்பட்டு வரும் தேர்வுகளில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் அந்த தேர்வு முடித்த 15 நிமிடத்தில் சமூக வலைதளத்தில் பரவி வந்தது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!
அவ்வாறு வெளியிடப்பட்ட வினாத்தாள் வெள்ளை காகிதத்தில் வினாக்கள் எழுதப்பட்ட நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தேர்வு வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்கூட்டியே வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று வதந்தி பரப்பப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரணை செய்த போது நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வுக்குப் பின்னர் வினாக்களை பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!
இந்த விதிமீறலை கண்டறிந்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு விதிமுறைகளை மீறி வதந்தியை பரப்பிய அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக அச்சம் கொண்டிருந்த தேர்வர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் எதுவும் முன்கூட்டியே வெளியாகவில்லை எனக் விளக்கி கூறியுள்ளது.