தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்காலம் தொடங்கிய நாள் முதல் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல்:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் பல்வேறு நெய்த்தொற்றை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அந்த வகையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தேங்கி நிற்கும் நன்நீரில் உற்பத்தி ஆகிறது. இத்தகைய கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!

இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவிற்கு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் 69 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் தற்போது வரை 10 நாட்களில் மட்டும் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு – ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!