தமிழக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை – கொரோனா பரவல் எதிரொலி!அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு – சுகாதாரப்பணி தீவிரம்!அச்சத்தில் பொதுமக்கள்!!
இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA & HRA உயர்வு? சம்பளம் உயர்வு விவரம் இதோ!
மற்ற கல்லூரிகளை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று பரவலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தடுப்பு பணியாக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.