தமிழகத்தின் இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் தேவாலய ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய விழாவை முன்னிட்டு இன்று டிச.3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் தேவாலயம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவானது நவம்பர் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை 10 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!
அதனால் இந்த கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் விழா கொண்டாட முடிவு செய்து கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று 9 நாள் விழாவில் தேர் பவனியும், கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த விழாவில் கன்னியாகுமரி மக்கள் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!
அவ்வாறாக இதுவரை 9 நாள் விழா நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று டிச.3ம் தேதி 10ம் நாள் விழா கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த 10ம் நாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விழா கொண்டாட்டம் காரணமாக கோட்டாறு வழியாக செல்லும் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.