மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் அதிகரிக்கும் என்பதால், வரும் புத்தாண்டில் ஊழியர்கள் மற்றொரு நல்ல செய்தியை பெறலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தப்பட்டதை அடுத்து, அவர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அத்தகைய ஊழியர்களின் மாத அடிப்படையிலான சம்பளம் உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததால் இது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அதாவது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் DA தொகையை மீட்டெடுத்த பிறகு, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா என கேட்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளிக்கையில், அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து மத்திய அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. என்றாலும் 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், ஒரே மாதிரியாக 2.57 என்ற பிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வரும் புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 2022ம் ஆண்டு ஜனவரியில் மாதத்தில் மீண்டும் அதிகரிக்கும் என்பதால் இதன் மூலம் அவர்களின் சம்பளம் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது ஜனவரி 2022 இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவுகளின்படி, 2022 இல் 3 சதவீத DA அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!

அந்த வகையில் 2022 ஜனவரியில் அகவிலைப்படி (DA) தொகை 3% அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த 3% உயர்வின் படி மொத்த DA தொகை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரிக்கலாம். இது தவிர, 2022ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!