தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 450 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் ஆகிய பணிகளுக்கு தலா 150 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- பட்டியல் எழுத்தர் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவுபவர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- காவலர் பணிக்கு அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.12.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.