டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!

0
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு உத்தரவு!
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு உத்தரவு!
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில் டிசம்பர் 31ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு:

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ போன்ற முழு யூனியன் பிரதேசத்திலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பூஜ்ஜியத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்ட 10,655 பேரில், 10,651 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 4 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். தற்போது வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு பல பகுதிகளில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!

இது குறித்த அறிவிப்பில், நேற்று டிசம்பர் 2ம் தேதி இரவு முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கட்டாயமாக இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று யூனியன் பிரதேச நிர்வாகத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த யூடி நிர்வாகம் வழங்கிய முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரளும், மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வேலையை விட்டாலும் பென்ஷன்! EPFO திட்டம்!

தென் ஆப்பிரிக்கா போன்ற சில நாடுகளில் கோவிட்-19ன் தொற்றில் இருந்து மாறுபாடு அடைந்த பி.1.1529 தொற்றுகள் அதிக அளவில் பரவி வருவதை கருத்தில் கொண்டு அனைத்து சர்வதேச பயணிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும், “சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின்படி நிர்வாகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றும் யூனியன் பிரதேச கூறியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!