தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறை காரணமாக பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று ஓய்ந்து வருவதால் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இயல்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வருடம் தோறும் அனைத்து பகுதிகளில் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சிறப்பு தினங்களுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்குவது வழக்கம் ஆகும். இருப்பினும் மாநிலம் முழுவதும் இல்லாமல் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் விழாக்கள், பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
அந்த வகையில் அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறை நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா வரும் பிப்ரவரி 16ம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்த கந்தூரி விழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பகுதியில் உள்ள அனைவரும் கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!
இந்த நிலையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 16ம் தேதி) புதன்கிழமை அன்று மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் மூடப்படும். இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாளை மறுநாள் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் கொண்டு செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.